மே-11,

5 மணிக்கு மேல் பரப்புரை நிகழ்த்தக்கூடாது என்பதால் எனது நண்பன் 5.15 பேரூந்து பிடித்து மன்னார்குடி வந்து கொண்டு இருந்தான்.7.40க்கு அவனை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக பேரூந்து நிலையத்திற்கு சென்றிருந்தேன்.அவனுடன் 4 பேர் வந்திருந்தார்கள்.

இவர்கள்,இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது நடத்தும் மிக கொடூரமான தாக்குதலை கண்டித்தும், அதற்கு தன்னால் மிக தாராளமாக எந்த அளவிற்கு உதவ முடியுமோ அந்த அளவிற்கு உதவி கொண்டிருக்கும் என் இந்தியாவை ஆளும் அரசையும் கண்டித்தும், நடந்து முடிந்த தேர்தலில் காங்கரஸும் அதன் தோழமை கட்சிகளும் தோற்க வேண்டும் என்றும் பரப்புரையில் ஈடுபட்டதால் ஆலங்குடியில் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டையில் 10 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

கலப் பணி எப்படி இருந்தது என்று கேட்டேன். நன்றாக இருந்தது என்றார்கள்.வந்த 4 பேரில் ஒரு பெண் இருந்தார்.நண்பன் அவர்களை அறிமுகப்படுத்தியபோது அந்த பெண் பாண்டிச்சேரியில் பல்கலைகழகத்தில் Phd. செய்துகொண்டு இருக்கிறார் என்று தெரிந்தது.நண்பனிடம் அதிர்ச்சியாக கேட்டேன் “எப்படிடா, பெண்களேல்லாம் பரப்புரைக்கு வந்தார்கள்” என்று. “பெண்கள் மட்டும் இல்லை, தங்கள் குடும்பத்துடன் இந்த பரப்புரையில் கலந்து கொண்டவர்கள் அதிகம்” என்றான்.

என் நண்பர்களுடன் வந்தவர்களை திருவாரூர் செல்லும் பேரூந்தில் ஏற்றி விட்டு நானும்,நண்பனும் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.”சிறையில் இருந்து வந்ததும் உங்கள் வீட்டிற்கு போன் பண்ணுனியா,வீட்டில் என்ன சொன்னார்கள்” என்று கேட்டேன். “வீட்டில் ஒன்னும் சொல்லவில்லை” என்றவன்,மேலும் “அவர் 30 வருஷமா மத்திய அமைச்சாராய் இருக்கிறார், அவர் தொகுதியில் மக்கள் நடந்து போக, இல்ல பேரூந்து போக கூட ஒரு ரோடு கூட மக்களுக்காக போட்டு கொடுக்க முடியாதவர், எதற்காக மத்திய அமைச்சாராக இருக்கிறாரோ” என்றான்

“இலங்கை பிரச்சனையை கிராம மக்களுக்கு எடுத்து செல்லும் போது,அந்தந்த மக்களின் தேவைகளை அறிய முடிந்தது.அந்த தொகுதியில் மக்களின் வாக்குகளை பெற ரூ.500 முதல் ரூ.1000 வரை கொடுக்கப் படுவதாகவும்” சொன்னான்.

இந்த ரூ.500-ஐ வாங்கி கொண்டு அடுத்து வரும் 5 வருஷத்திற்கு நாமேல்லாம் நாய் குட்டிகளை போல் அவர்கள் கால்களை சுற்றி சுற்றி வந்து நக்கி கொண்டு இருக்க வேண்டும் என்று எண்ணிய போதே செல்போன் சினிங்கியது.ஊட்டியில் இருந்து நண்பன் அழைத்திருந்தான். “என்னடா, உங்கள் தொகுதியில் எவ்வளவு பணம் கொடுக்கிறார்கள்” என்றேன். “பணமெல்லாம் கிடையாதுடா” என்றான்.
“அட நாடு அதுக்குள்ள திருந்திட்டா” என்றேன். “அதெல்லாம் இப்போ நடக்காது, பணத்திற்கு பதிலாக செல்போன் தராங்க” என்றான். “உனக்கு கொடுத்தாங்கலா” என்றேன். “அது எப்படி வாங்காம இருப்பேன்.அதெல்லாம் நம்ம பணம். இப்போ செல்போன் கொடுக்குற மாதிரி கொடுத்திட்டு, பின்னாடி அவன் 5 செல்போன் கம்பெனி ஆரம்பிச்சிடுவான்.நேத்து தான் தடைசெய்யப்பட்ட இலங்கை தமிழர்களின் வாழ்கையை பதிவு செய்த “இறுதி யுத்தம்” CD பார்த்தேன்.நேத்து என்னால சாப்பிட முடியல” என்றான்.

“இந்த மாதிரி அப்பாவி மக்கள அங்க சாகுறதிர்கு துணைபோற இந்த அரசு தோற்கனும்டா. உனக்கு தெரிந்தவர்கள், சொந்தங்கள் எல்லாரிடத்திலும் எடுத்து சொல்லி காங்கிரஸ் கூட்டனிக்கு ஒட்டு போட வேண்டாம் என்று சொல்லு.சரிடா நாம அப்புறம் பேசுவோம்” என்று செல்போனை அனைத்தேன்.

என்னுடன் நடந்து வந்த நண்பனிடம் கேட்டேன் “ஏண்டா, இன்னமும் மக்கள் தொன்று தொட்டு வரும் தங்களுடைய குடும்ப பெயர்களை போல்,என்னுடைய அப்பா,தாத்தா இரட்டை இலைக்குதான் ஒட்டு போட்டார்கள்,அதனால் நானும் இரட்டை இலைக்குதான் போடுவேன் என்று சொல்கிறார்கள். இவர்கள் எல்லாம் எப்போதான் திருந்த போராங்களோ”. இதற்கு நண்பன் சொன்ன பதில் அதிர்ச்சியாக இருந்தது.

“சிவகங்கை தொகுதியில் சில கிராமங்களுக்கு சென்றிருந்தேன் அங்கு, எங்க கட்சிக்குதான் ஓட்டு போடுவேன் என்று சாமி படத்திற்கு முன்பாக கற்பூரம் அடித்து சத்தியம் செய்ய சொல்கிறார்களாம் ஆளும் கட்சிக்கு எதிரானவர்கள். தமிழன் பக்தி பயத்தை பயன்படுத்தி இந்த மாதிரி காட்டுமிராண்டி தனத்தை கையாலும் அரசியில் வாதிகளுக்கு நாமெல்லாம் ஒட்டு போட்டு வெற்றி பெற வைத்தால் நாடு என்னவாகும்” என்றால்.

மொத்தத்தில் இன்று அரசியலில் நிறைய பன்றி கூட்டங்கள் அதிகமாகி விட்டன. இந்த பதிவை எழுதி கொண்டிருக்கும் போது கரூர் பக்கத்திலுள்ள ஒரு கிராமத்திலிருந்து நண்பன் ஒருவன் செல்போனில் அழைத்திருந்தான்.அவன் கிராமத்தில் ஒரு ஒட்டிற்கு ரூ.500 ஆளும் கட்சிக்கு எதிரானவர்கள். ரூ.100
ஆளும் கட்சியும் கொடுத்தார்களாம்.

கொல்லை அடிப்பவனின் எவன் குறைவாக கொல்லையடிக்கிறானோ அவனுக்கு ஒட்டு போடும் நிலைமை வந்துவிட்டது. இப்படியே போனால் எந்நாடு என்னவாகுமோ.

-இப்படிக்கு
ஓட்டு போட்டே ஓட்டாண்டியாய் போனவர்கள் சார்பாக
செ.பாஸ்கரன்

Newer Posts Older Posts Home