"டேய் பாஸு,எல்லா பணத்தையும் செலவழிச்சிடாம, உன் பெரியப்பா வீட்டிக்கு 2 பிஸ்கெட் பாக்கேட், வெத்தலை சீவல், ஸுவீட் கடைல கால் கிலோ மிக்சர் வாங்கிக. பஸ் 6 மணிக்கு வந்திடும். நீ கிளம்பு, சாயங்காலம் 5.30 மணி பஸ்ல வந்திடு, சரியா ".
அம்மா சொன்ன எல்லாமும் வாங்கி பேருந்துக்காக காத்திருந்தேன், அதோ என் சொந்த ஊருக்காக செல்லும் பேருந்து வந்துவிட்டது. மொத்தம் 7 பயணிகளில் நானும் ஒருவனாக ஜன்னலோர இருக்கையில் பயணம். பேருந்தில் ஜன்னலோர பயணம் என்பது எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான, இனிமையான பயணம். அதுவும் அதிகாலை பயணமும், நிலா இரவு பயணமும் என்றுமே சுகம்தான்.
கிராமபுறத்திர்க்கு பெரும்பாலும் இயக்கப்படும் டவுன் பஸ்களின் ஒன்றில் அன்று எனது பயணம். சுமார் 45 நிமிட பேருந்து பயணத்தில் எனது சொந்த கிராமத்தை அடைந்துவிடமுடியும்.
எல்லோருக்கும் சொந்த ஊர் என்றவுடன் ஏதோ ஒரு ஈர்ப்பும், ஏதோ ஒரு பற்றுதலும் ஏற்படுகிறது. எனக்கும் என் சொந்த ஊரை பார்க்க போகிறேன் என்ற ஆவலாக இருந்தது. சொந்த ஊர் கிராமமாக இருந்துவிட்டதால் இன்னும் அதிகமான ஆர்வம் ஏற்பட்டுவிட்டது.
15 நிமிட பயணத்தில் நகரை கடந்து கிராம புறங்களின் வழியே பயணம் தொடர்ந்தது.
அதிகாலை சூரியன் தனது ஒளி கரங்களை அகலமாக விரித்து கொண்டிருந்தான். சிலு-சிலுவென்ற இதமான பனி காற்று வீசியது. பச்சை பசேல் என்று வளர்ந்திருந்த பயிர்களின் நடுவே கொக்கு கூட்டம் கூட்டமாய் மெய்ந்து கொண்டிருந்தன.
பேருந்தின் ஒலி கேட்டு மொத்தமாய் பறந்தன அத்தனை கொக்கு கூட்டமும்.
அடடா! எத்தனை அழகு. ஒடும் பேருந்தில் இருந்து இறங்கி அங்கேயே இயற்கையின் அழகை பருகலாம் போல் இருந்தது. என் மொத்த மனமும் அந்த அழகிய பொழுதின் இளம் பனியாய் கரைந்து கொண்டு இருந்தது.
பசுமை கடலாய் பரவி இருந்த பயிர்களின் நடுவே கப்பலாய் பேருந்து பயணித்து கொண்டு இருந்தது. எனை மொத்தமாய் கரைத்து கொண்ட இயற்கை கடலின் பயணத்தில் நடுவே ஊர் வந்ததை உணர்த்தியது பல கரங்களை பூமியுடன் குழுக்கும் பெரிய ஆலமரம்.
அடுத்த நிறுத்ததில் இறங்கி வேகமாக நடைபோட்டேன் பெரியப்பாவின் வீடு நோக்கி.
"வாடா! நல்லா இருக்கியா? அப்பா, அம்மா நல்லா இருக்காங்கலா? ஏண்டா போனமாசம் வரல" - என்னுடைய பெரியம்மா.
"School leave கிடையாது, இப்பதான் கிடைச்சிச்சு".
"தம்பிய ஏண்டா அழைச்சிட்டு வரல?"
"அம்மா வரும் போது அழைச்சிட்டு வராங்கலாம். ஆமா, பெரியப்பா எங்க?"
"அவரு காலைலே வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச பொய்டாரு. சாப்டியா? ஏய் நடுபுள்ள, தம்பீக்கு சாப்பாடு கொடுதிட்டு சீக்கிரம் அப்பாக்கு சாப்பாடு எடுத்துட்டு போ, அப்பா, நீவருவனு பாத்திட்டு இருக்க போராரு"
"பெரியம்மா, நானும் பெரியப்பா கூட வயலுலே சாப்பிட்டுக்கிறேன்" நானும், எனது அக்காலும் தூக்கு வாளியில் சாப்பாட்டை எடுத்து கொண்டு வயல் நோக்கி போய்கொண்டு இருந்தோம்.
வழியில் தென்படுபவர்கள் எல்லோரும், "யாரு? செல்வாராசு பையனா,எப்படி இருக்க?
அப்பா, அம்மா எப்படி இருக்காங்க? நீ பெரியவனா, சின்னவனா?" என நலம்விசாரித்தார்கள்.
இதுவரை நாலைந்து பேர் நலம் விசாரித்திருப்பார்கள், அவர்களில் ஒருவரை மட்டும் அடையாளம் தெரிந்தது. மற்றவர்களை "அவர்கள் யார்?" என்று என் அக்காவிடம் கேட்டு தெரிந்துகொண்டேன்.
உண்மையான அன்போடும், மிகுதியான அக்கரையோடும் பரஸ்பரம் நலம் விசாரிப்பது கிராமபுற மக்களுக்கே உரித்தான தனித்துவமான அடையாளம்.
அப்படி நம்மிடம் நலம் விசாரிக்கும் போது கிராமபுற மக்களின் மீது பற்றும், அவர்கள் மீதான மரியாதையும் அதிகமாகிறது.
இதே அக்கரையுடன் நகர்புறங்களில் நலம் விசாரிக்கப்படுவத்தில்லை. அப்படி ஒருவர் நலம் விசாரித்தால் நமக்கு பயமே தோன்றுகிறது. நகர்புறத்தில், அடுத்த வீட்டில் இருக்கிறவரின் பெயர் என்ன,எத்தனை பேர்இருக்கிறார்கள் என்று யாருக்குமே தெரிவதில்லை.
பெரிய வாய்காலின் கரையில், இளம்காலை பொழுதில் அக்காவோடு நடந்து கொண்டு இருக்கிறேன்.
"அதோ தெரியுது பாரு ஒத்த பனமரம்,அதுலதான் பேய்ங்க நிறைய இருக்குதாம்.
நான் மதியானம் வயலுக்கு வந்தேனா, அந்த பக்கம் பாக்கவே மாட்டேன். சில சமயம்அந்த குட்டை வரையிலும் ஒடிடுவேன்"
அக்கா சொல்ல, சொல்ல அவ கைய நல்லா இருக்கமா புடிச்சிக்கிறேன். அக்காவும், நானும் கொஞ்சம் வேகமாக நடக்கிறோம்.
"அதோ நம்ம வயல் தெரியுது பாரு" என்றால் அக்கா.
பெரியப்பா அங்கு வாய்காலில் இருந்து வயலுக்கு ஏற்றம் போட்டு தண்ணீர் பாய்த்து கொண்டு இருந்தார்.
"வாடா! நல்லா இருக்கியா? 6.30 பஸ்ஸுக்கு வந்தியா? அப்பா, அம்மா நல்லா இருக்காங்கலா? தம்பி வரலையா?"
"எல்லாம் நல்லா இருக்காங்க, அவன் அடுத்த முறை அம்மாகூட வாருவான். நீங்க நல்லா இருக்கிங்கலா?"
"எனக்கு என்னடா? நான் நல்லாதான் இருந்கேன். வயல பத்தியா? நாத்து நல்லாவந்துருச்சு, இன்னும் நாலு நாள்ல நடவ ஆரம்பிக்க வேண்டியதுதான்."
"பாத்தேன். எல்லாம், நல்லா வந்திருக்கு."
"என்னடா, உர மூட்டை விலையெல்லாம் அநியாயத்துக்கு அதிகமாச்சு. மழையும் இப்ப சரியா பெய்ரதில்லை. வாய்கால்ல இந்த வருஷம் தண்ணீ கம்மியாதான்வருது. இப்படியே போன எவனும் விவசாயம் பண்ண மாட்டான்"
அவருடைய பேச்சின் துயரம் எனை ஏதோ செய்தது. "போய் வயல சுத்தி பாத்திட்டு வா" என்றார்.
வயல் சேற்றின் வாசமும், பக்கத்து வயலின் பயிரின் வாசமும் என்னை இயற்கையின் சிறகுகளில் அடக்கிவிட்டன. என்னையே மறந்தேன். புது உலகத்தில் நடந்து கொண்டு இருந்தேன். இல்லை, இல்லை மிதந்து கொண்டுஇருந்தேன். வயலின் வரப்பில் தண்ணீர் பாய்ந்து கொண்டு இருந்தது.
கொக்குகள் மீன்களையும், நண்டுகளையும் அழகான அலகுகளால் கொய்து கொண்டு இருந்தன. சில கொக்குகள் மீன்களை கொத்திகொண்டு பறந்தன.
இதோ நானும் கொக்குகலோடு பறந்து கொண்டு இருக்கிறேன். எவ்வளவு நேரம் இப்படியே நின்று வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தேன் என்று தெரியவில்லை.
அக்கா வந்து, என் தோளை தொட்டு " டேய் பாஸு, எவ்வளவு நேரம் கூப்பிடுறது, அப்படி என்னதான் பாத்திட்டு இருக்க.வா சாப்பிடலாம்" என்றாள்.
தட்டில் சாதமிட்டு, சாம்பாரின் சில காய்கறிகளும், முலை கீரை கூட்டும் இருந்தன.
வயலின் வரப்பில் உட்கார்ந்தேன். பக்கத்தில் ஓடும் வரப்பு தண்ணீரில் கை கழுவிவிட்டு சாப்பிட உட்கார்ந்தேன்.
"பரீட்சை எப்படா, நல்லா படிக்கிறியா" என்றார் பெரியப்பா.
"பரீட்சை அடுத்த மாசம், நல்லா படிக்கிறேன்" சாப்பாடு முடிந்து மறுபடியும் தண்ணீர் பாய்ச்ச ஆயத்தமானார்.
"வீட்டுக்கு போ, நான் 3 மணிக்கு வந்திடுறேன்".
"அக்கா போகட்டும், நான் இங்கேயே இருக்கேன். நானும் உங்க கூட 3 மணிக்கு வீட்டுக்கு கிளம்புறேன்".
பெரியப்பா தண்ணீர் பாய்ச்ச ஆரம்பித்தார். அக்கா பாத்திரங்களை கழுவி எடுத்து கொண்டு "சீக்கிரம் வீட்டுக்கு வந்திடுடா பாஸு" என்று நடக்கலானாள்.
நான் வயலின் ஒரம் இருந்த மேட்டில், மரத்தின் நிழலில் அமர்ந்து, இயற்கையின் அழகை பருக ஆரம்பித்தேன். எத்தனை அழகு, இந்த பூமி மகள்.
இதையெல்லாம், இந்த அழகான, இனிமையான, அமைதியான, ரம்மியமான நகரவாழ்வில் தொலைந்தேனா தொலைத்தேனா!!!!
Sweet sugar Aarthi said...
dei basky yenna copy adikadhey
January 4, 2009 at 11:22 PM
Sakthivel Loganathan said...
Super Da ..... Don't bother abt Aarthi ... U continue ur Journey ..!!!
January 9, 2009 at 7:00 AM