அடித்தால் வதைத்தால் பட்டினிப் போட்டால்
பலாத்காரத்திற்கு உட்படுத்தினால்
குடும்பவன்முறை சட்டம் பாயுமாம்!
வெளிக்காயம் படாமல் இரத்ததுளிகள் சிதறாமல்
உள்ளம் ஒடிந்து உயிர்சிதைத்து
வன்சொல் வீசும் வன்கொடுமைக்கு
என்னச் சட்டம் என யோசித்த போது
வாய்மூடி மௌனித்து அன்புசட்டத்தில் வளைக்கப்பார்த்தேன்
தோல்விதான் தொடர்கதையானது
நான்...
மரணித்தாலும் மறுசுழற்சிபெற்று
என் அன்புச்சிறைக்குள்
அடைக்காமல் விடமாட்டேன் உன்னை..
-இப்படிக்கு ஸ்ரீவித்யா
